கவிதைத் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைத் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 அக்டோபர், 2018

கலாமுக்கு எனது கவிகளின் சலாம்..




என்னை செதுக்கிய சிற்பிக்கு பிறந்தநாள்..
என்னை வழிநடத்திய குருவிற்கு பிறந்தநாள்..
என்னை தளரவிடாமல் செய்த தன்னம்பிக்கைக்கு பிறந்தநாள்..
என்னை தலையில் குட்டும் சிந்தனையாளனுக்கு பிறந்தநாள்..
என்னை துன்பத்தில் இருந்து காக்கும் காவலனுக்கு பிறந்தநாள்..
என்னை முத்தமிடும் எண்ணங்களின் எழுத்தாணிக்கு பிறந்தநாள்..
என்னை ஆதரித்த அழகியத்தமிழ் மகனுக்கு பிறந்தநாள்..
என்னை தழுவி அனைத்து கொண்ட அன்னைக்கு பிறந்தநாள்..
என்னை வீழாமல் தோள் கொடுத்த தோழனுக்கு பிறந்தநாள்..
என்னை மனிதியாக வெளிவர உதவிய சிறகுக்கு பிறந்தநாள்..
என்னை மட்டுமல்ல பல இளைஞர்களை கனவு காண செய்த கனவு நாயகனுக்கு பிறந்தநாள்..
என்னை பெறாமல் நான் தத்தெடுத்த என் தந்தைக்கு பிறந்தநாள்..
உன்னை போற்றி பேசிட என்னிடம் வார்த்தைகள் இல்லை..
எனவே உனது கால்களை முத்தமிட்டு வணங்கி தொழுகிறேன்.. 


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கலாம் அப்பா..

புதன், 24 ஜனவரி, 2018

நம்பிக்கை


பசியின்பொழுது உண்டசோறு
தன்தந்தையின் உழைப்பிள்
பாசத்தில்தவித்த பொழுது
தன்தாயின் அரவணைப்பு
கஷ்டம்என்றுவரும்போது
என் நண்பனின் நம்பிக்கை.

சு.சுபத்ரா,
முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை,

தாயும், தந்தையும்


பத்து மாதம் வயிற்றில் சுமப்பவள்  தாய்
வாழ்வுமுழுவதும் தன் நெஞ்சில் சுமப்பவர் தந்தை
அன்பை ஊட்டியவள் தாய்
அறிவை ஊட்டியவர் தந்தை
உலகில் எந்த துன்பமும் நேராமல்
என்னை காத்தவர்கள் நீங்களே
ஒரு நொடி என்னை காணவில்லை 
என்றாலும் வருந்தியவள் தாய்
                                            கவி லாவண்யா     
                                      முதலாம் ஆண்டு வணிகவியல்

தங்கை



தேவையற்ற சேட்டைகள் செய்தாலும்
தேவையான அன்பு கொள்வாள்
என் மேல்… ஒரு தங்கையான
அவளுக்காக திட்டல்கள் ஏற்பேன்!
அவளுக்காக விட்டுக் கொடுப்பேன்!
அவளுக்காக அனைத்தையும் செய்வேன்!ஏன்… 
அவளுக்காக தாயாக மாறுவேன்!
அவளுடைய அன்பு அக்காவாக
எக்காலத்திலும் என்றும்!     
                                  
ர.விஜயா                             
   முதலாம் ஆண்டு வணிகவியல்

மழை


மழை என்பது கடவுளால் உண்டான
நீரினால் ஆன ஐம்பூதங்கள் அடங்கிய ஓர்
சக அற்புதப் படைப்பு மழை!
இவை அனைத்தும் அடங்கிய வருண
தேவரால் பொழியப்பட்ட மழை!
அனைத்து மக்களின் மகிழ்ச்சி மட்டுமல்ல
மக்களின் தாகமும் மழை!
விவசாயிகளின் உயிர் மூச்சும் மழை!
விவசாய மக்களின் பெரும் வீழ்ச்சும் மழை!
மக்களின் துயர்நீங்கா உயிர் பறிப்பதும் மழை!
மக்களின் மகிழ்ச்சியும் மழை! துன்பமும் மழை!
இன்பமும் மழை! சோகமும் மழை!

ரா.ரம்யா
முதலாமாண்டு ஆடை வடிவமைப்புத் துறை

இளைய சமுதாயமே கைகொடுப்பீர்



சிந்தையில் சிந்தித்தால்,
நன் மந்திரம் போதித்தால்,
விந்தையால் விதை விதைத்தால்,
மந்தையில் வளம் நீ படைத்தால் 
சந்தையில் சாதிப்பாய், சரித்திரம் நீ படைப்பாய்,
சாகச உடை உடுப்பாய், சாதியை நீ உடைப்பாய், 
சமரசம் அதை தொடுப்பாய,; சங்கமம் நீ தொகுப்பாய்,
சங்க நூல் வழி மதிப்பாய் - நீ
    தழிழனாய் தடம் பதிப்பாய்.     
                                   
பவித்ரா வெங்கடேசன்              
                    முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

பூமித்தாய்


பூமித்தாயே! நீ மக்கள் அனைவரையும்
உன் குழந்தையாக நினைத்து அவர்களைத் தாங்கினாய்
ஆனால் அவர்களோ உன்னைத் தாய் என்று பாராமல்
உன்னை அவமதித்தனர் இருந்தும் நீ அவர்களை 
கீழே விழாமல் தாங்கினாய்
இதுதான் தாயின் அன்போ? என்று வியந்தேன்..  

                                          வர்சிதா 
முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

அன்பு



நம்வாழ்க்கையில் பல மனிதர்களை சந்திக்கிறோம்
அவர்களிடம் இருந்து நாம்அன்பு. ,  பாசம் போன்ற பல குணங்களைப் பார்க்கிறோம் 
இதை விட ஆயிரம்குணங்களைநம்மிடம்  காட்டுவது நம் பெற்றோர்கள் தான்
இவர்களை விட உலகில் வேறெதுவுமில்லை..
உலகத்தில் பல்வேறு வார்த்தைகள் உள்ளன. 
மிக சிறந்ததாக மதிக்கப்படுவது 
அம்மா என்ற வார்த்தை மட்டுமே 
அம்மாவுக்கு ஈடு வேறு எதுவுமில்லை.

வ..ரூபிகா              
                         முதலாம் ஆண்டு கணிதம் இ

உறவுகள்


உன்னைத் திட்டினாலும் அடித்தாலும் உன்
  நலம் நாடும் தந்தை
நீ அழும் போதெல்லாம் உன்னுடன்
  சேர்ந்து அழும் தாய்
என்றும் உனக்காகவே பேசும் தங்கை
  நீ விலகி விலகிப் போனாலும்
  உன் அன்பைத் தேடும் தம்பி
நீ விழும் போதெல்லாம் தோல்
  கொடுக்கும் தோழிகள்
உன்னை நல்வழிப்படுத்தி 
  உயர வைக்கும் ஆசிரியர்கள்
உன் வெற்றியைக் கண்டு 
  பெருமிதம் கொள்ளும் உறவுகள்
இத்தனை உறவுகள் இருக்கும் போது
உன்னை அழவைக்கும் காதல் எதற்கு..?       
                                
தாமரைச்செல்வி                  
            முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

காலங்கள் கடந்த நட்பு




கண் இமைக்கும் நேரத்தில்
சேர்வது நட்பல்ல!
கண் இமை மூடும் வரை
சேர்ந்து இருப்பது தான் நட்பு!
எங்கேயோ பிறந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம்
உறவுகளுக்கு மேல் உயிர் ஆனோம்
காலங்கள் கடந்துப் போனாலும்
                                  கடைசி வரைத் தொடர வேண்டும் நம் நட்பு.                                          

    நந்தினி                       
    முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

கேள்வியோடு பெண்...



விதையாய் விதைத்து வளர்ந்து
பெண் விடுதலை அல்ல
விதையாய் விதைத்து மரமாய்
வளர்ந்து பெண் வன்கொடுமை
காலத்தோடு வளர்ந்த நாகரிகமுள்ள
சமூகம் ஏன் நாகரிகம்
இழந்து பெண் இனத்தை தீமை
என்ற தீயால் கொடுமைச் செய்கிறது
கேள்விகளோடு அலைந்து விடையின்றி
தவிக்கும் பெண் இனம்.

ச.ஐஸ்வர்யா
முதலாமாண்டு ஆங்கிலத்துறை

வியாழன், 6 ஏப்ரல், 2017

நட்பு..

                                                     
 


நட்பு என்னும் கூட்டில் இணைந்து வேதனையை மறந்து சிரித்திடுவோம்
பேதங்கள் இன்றி பழகிடுவோம்
தாயின் கருவறையில் கிடைக்காத நட்பு கல்லூரி அறையில் கிடைத்தது
ஏங்கோ பிறந்த நாம் நட்பு என்னும் பாதையில்                               கைக்கோர்த்து இணைந்திடுவோம்
சொந்தங்கள் மாறலாம் நட்பு ஒன்று தான் மாறாதது 
தமிழில் இருப்பது வல்லினம் மெல்லினம் நம் இடையில் இருப்பது
நட்பு  னம்.
பூக்கள் கூட உதிரி தான் பூக்கிறது-ஆனால்

நட்பு என்ற பூ உதிராமல் காக்க வேண்டும்.