வியாழன், 6 ஏப்ரல், 2017

காதல்...

                                                                           
         

டேய்   கிஷோர்  !   உமா ,சங்கவி   ரெண்டு   பேர்ல   யாருக்கு  ஓ.கே  சொல்லப்போற    எனக்கு   குழப்பமா   இருக்குடா !”  என்றான்   மணி.
“ரெண்டு   பேருமே   என்னை   காதலிக்கறாங்கா… உமா   நல்லவ   ஆனா   நடுத்தர   குடும்பத்த சேர்ந்தவ   சங்கவி   ரொம்ப    வசதி   அதனால   நான்    சங்கவிக்கே   ஓ.கே   சொல்லப் போறன்.”என்றான்   கிஷோர்.
இவருக்கு    கல்யாணம்    நடந்து    கிஷோர்    வீட்டோடு     மாப்பிள்ளையானான்   6  மாதங்களுக்குப்    பிறகு ,
கிஷோரும் ,மணியும்   சந்திக்கிறார்கள்  
என்னடா   கிஷோர்     எப்படியிருக்க  ?சங்கவி   எப்படி   இருக்கா  ?என்றான்    மணி  ஆவலாக
“என்  வாழ்க்கையே    நாசம்மா     போச்சுடா” என்று  கூறினான்    கிஷோர்.
“என்னடா   ஆச்சு   ஏன்    அழற    டேய்   கிஷோர்…”  என்று    பதறினான்.
“அவளக்  கல்யாணம்    பண்ணினது   உண்மைதான்டா    ஆனா   அவ  என்னை    மதிக்கவேயில்லை  ,  ஏன்   கேட்க   ஆரமிச்சேன்   இப்ப   விவாகரத்துல    வந்து   முடிஞ்சிருச்சி”   என்று     அழுதான்   கிஷோர்.
ஏன்டா   பணம்   ,வசதி   அவளக்   கல்யாணம்     பண்ணி   நீ   நாசமாப்   போயிட்ட   ஆனால்       உனக்குத்    தெரியுமா?   கிஷோர்    உன்னைக்   காதலிச்சாளே      உமா ,   நடுத்தரக்   குடும்பம்னு   நீ      ஒதுக்கனவ     இன்னைக்கு     அவ  பெற்றோர்     சொன்ன     மாப்பிள்ளையை     கட்டிக்  கிட்டு    நிம்மதியா     வாயறா.   இதுக்    கெல்லாம்       காரணம் ,    உன்னோட      பேராசைதாண்டான்னு      சொல்லிட்டு    சென்று விட்டான்       மணி.
கிஷோருக்கு      எல்லாம்     புரிந்தது,  ஆனால்   காலம்    கடந்துவிட்டது.   என்பது      தாமதமாத்தான்       தெரியவந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக