வியாழன், 6 ஏப்ரல், 2017

நீரோடு

                                                           


அழகாய் பூத்திருக்கும் தாமரையும்
அடி ஆழம் தெரியாமல்  தொட்டுப் பழகும்
தண்டுகள் மிதமாய் மிதந்துபோகும் இலைகள் – எப்போதும்
மலர்ந்து சிரிக்கும் தாமரை ஒன்றோடு ஒன்று  
இணைந்து இருக்கும் நீரோடு

கடல்வாழ் உயிர்யினங்கள் நீர் இல்லாமல்
உயிர்வாழ முடியாது –அதுபோல
மீன்கள் கடல் அடியில் அழகாய் மிதந்து போகும்
இனி  இணைந்தே  இருப்போம் நீரோடு

பரந்த  நிலபரப்பில்  பசுமையான வயல்வெளிகளுக்கு
உணவு  ஆதரமாக விளங்குவது  நீர் மட்டும் தான்
இனி  இனத்தோடு இணைந்து இருப்போம் நீரோடு

மீத்தேன் வாயு  நீரோடு கலப்பதனால்
நீர் கூட விஷமாக மாறிவிடும்
மக்களுக்கு  நோய்வாய்  ஏற்படும்
நிலத்தோடு இணைந்து இருப்பதனால்
நிலம் கூட மாண்டுபோய் விடும்

நீர் நெருப்பாக கூட மாற வாய்ப்பு உண்டு
இதனால்  நம் நாடு  வறண்ட பாலைவனமாக 
மாற வாய்ப்பு உண்டு .
நிலமும்  நீரும் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து விடும்

நீரியின்றி அமையாது உலகு என்பது போல

நீர் இல்லாமல் நம்நாள் வாழ முடியாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக