வியாழன், 6 ஏப்ரல், 2017

கல்வி

               

                                           
            கல்வி அமைச்சர் கண்ணனைப் பார்த்து நிருபர் ஒரு கேள்வி கேட்டார் .
            ”மதிப்பிற்குரிய கல்வி அமைச்சர் அவர்களே ! பெண்கள் கல்வி கற்க என்ன முயற்சிகள் நீங்க எடுத்திருக்கீங்க, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க? “ என்றார்..
            “பெண்கள் இந்த நாட்டின் கண்கள் , அவர்களே இந்த நாட்டின் செல்வங்கள் … அவர்களுக்குக் கல்வி என்பது மிக முக்கியமான ஒரு அரண் கல்வியை கட்டாயம் அவர்களுக்குத் தரப் பட வேண்டும். மேடைப்பேச்சு ஒரு மாதிரியும் வீட்டில் ஒரு மாதிரியும் நடப்பவனல்ல நான் பெண் கல்விக்காக உயிரையும் கொடுப்பவன் . என்று கூறினார்.அதைக் கேட்ட பெண்களின் கோஷம் விண்ணைத் தாண்டியது.
மாலை;
            அப்பா! நீங்க மனம் மாறுவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கவில்லை ரொம்ப நன்றிப்பா இனி நான் சந்தோஷமா கல்லூரிக்குப் போவேன் என்று கூறினாள் ராணி உவகையுடன் .
            ஆமா யாரு உன்ன கல்லூரிக்கு போகச் சொன்னது ?
            அப்பா நீங்க தான இன்னைக்கு அந்த நிருபர்கிட்ட அப்படி சொன்னீங்க என்றாள் கலக்கத்துடன்
            அது நிருபர்களுக்காக,மக்களை ஏமாத்தரத்துக்காக…
            அப்ப பெண்கல்விக்காக உயிரையும் கொடுப்பதாக சொன்னது…
            அதுவும் பொய்தான்நீங்க ஏல்லாம் படிச்சி எண்ணத்த பண்ணப் போறீங்க பேசாமல்  பெத்தவங்கள பாக்கற பையன கட்டிட்டு ஒழுக்கமா வாழுங்க.
இரவு;
            சார் , நீங்க சொன்னது உண்மைதான், இனி தாமதிக்க வேணாம் நான் மறைவா எடுத்த காணொலியை நாளைக்கு உங்க சேனலுக்கு தரேன் அதைப்போட்டுபெண்களைக் காப்பாற்றுங்கள் என்று தன் மகள் நிருபரிடம்  பேசிக் கொண்டிருக்க நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார் . கல்வியமைச்சர்.

            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக