செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

இலட்சியம்



                       இலட்சியம்

   …ஒரு  சீடன் தன் குருவிடம் சென்று, ‘ஐயா,எனக்கு ஆன்மீகம் வேண்டும்’ என்றான், குரு அந்த இளைஞனைப் பார்த்து அமைதியாகப் புன்முறுவல் பூத்தார், எதுவுமே பேசவில்லை. இளைஞன் ஒவ்வொரு நாளும் வந்து தனக்கு ஆன்மீகம் வேண்டுமென வற்புறுத்தினான். அந்த முதியவர் இளைஞனை விட விஷயம் தெரிந்தவர். ஒரு நாள் வெயில் கடுமையாக இருந்தது. அன்று அவர் அந்த இளைஞனைத் தம்மோடு ஆற்றுக்கு நீராட அலைத்துச் சென்றார். அவன் நீருக்குள் இறங்கி மூழ்கியதும், முதியவர் அவனைப் பிடித்து, பலவந்தமாக நீருனுள் அமிழ்த்தி வைத்துக் கொண்டார். அவன் திணறிப்போய் வெளியே வரப் போராடினான். சிறிது நேரம் அவர் விடவே இல்லை. பிறகு அவனை விட்டார். சோர்ந்துபோய் தலையை மேலே துக்கினான் அவன், அப்போது அவர் அவனிடம், ‘நீரினுள் இருந்த போது உனக்கு மிகவும் தேவையாக இருந்த்து எது? என்று கேட்டார். மூச்சுக் காற்று என்றான் சீடன். ‘ஆம்’ இறைவன் வேண்டும் என்று அவ்வாறே  நீனைக்கிறாயா?  அவ்வுளவு தூரம் இறைவனின் தேவையை உணர்ந்தாயானால் அவனைப் பெறுவாய்’ என்றார் குரு.
    அந்தத் தாகம் , அந்த ஆசை எழும்வரை, உன் அறிவாலோ, உனது சாஸ்த்திரங்கரலோ, உருவங்கலோ, நீ எவ்வுளவு தான் பாடுபட்டாலும் ஆன்மீகத்தைப் பெற முடியாது.அந்தத் தாக்கம் உன்னிடம் எழும் போது,நீ நாத்திகனைவிட மேலானவன் அல்ல. நாத்திகன் நேர்மையாகவாவது இருக்கிறான். உன்னிடம் அதுவும் இல்லை.
            
   
                              
 2-ம் ஆண்டு வணிகவியல் கணினிப்பயன்பாட்டுத் துறை
                        து.வைதேகி.                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக