வியாழன், 1 செப்டம்பர், 2016

தன்னம்பிக்கை 5

Image result for தன்னம்பிக்கை சித்தர்(தன்னம்பிக்கை தொடர்கின்றது…)
   
   `நெடுநேரம் தியானம் செய்தீர்களே! புத்தர் தங்களிடம் என்ன சோன்னார்?’
   
    `அவர் ஒருபோதும் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் அமைதியாகக் கேட்டுக் கொண்டுருப்பார்’ என்றார் துறவி.
     
    `அப்படியா? அதுசரி, அவரிடம் தாங்கள் என்ன சொன்னீர்கள்?’ என்று தனது அடுத்த கேள்வியைக் கேட்டார் தலைமைக் குரு.
      
    `நானும் எதுவும் சொல்ல மாட்டேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்று சொல்லிவிட்டு அந்தத் துறவி அங்கிருந்து கடந்து சென்றார்.
      
     மவுனத்தில் ஆழ்ந்த அர்த்தம் இருக்கின்றது. அதில் ஆழம் இருக்கிது. சப்தங்களை விட மவுனத்திற்கு வலிமை அதிகம் மவுனம் என்பது ஊமைத்தனம் அல்ல.அது ஒரு நிசப்த கர்ஜனை; அது ஓர் ஓசையற்ற சங்கீதம்.

                      
                     (தொடரும்..)

2 கருத்துகள்: