புதன், 1 ஜூன், 2016

அனி ஃப்ராங்க்

                                                          
Image result for anne frank

1942 ஆம் காலகட்டத்தில் அந்தச் சிறுமி எழுதிய நாட்குறிப்பு உலகப் புகழ் பெற்றது.
     ஜெர்மெனியை ஹிட்லர் ஆண்ட காலகட்டம். ஹிட்லர் மது அருந்துவதில்லை. சைவ சாப்பாடு. சித்திரம் வாரைவதில் ஆர்வம் உண்டு. இது போன்ற நல்ல குணங்கள் கொண்ட ஒருவர் மிகவும் நல்லவராகத்தானே வாழ்ந்திருக்க வேண்டும்!
     ஆனால் அவ்வாறு இல்லை. மிகவும் கொடூரமானவனாக வாழ்க்கை நடத்தினார். யூதர்களைக் கண்டால் அவ்வளவு வெறுப்பு. லட்சக்கணக்கான யூதர்களை விஷ வாயு உள்ள ஒரு அறையில் அடைத்து அந்த விஷக் காற்றை அவர்கள் சுவாசிக்கச் செய்து மடிய வைத்தவர். அந்த காலகட்டத்தில் அறுபது லட்சம் யூதர்கள் இவ்வாறு கொல்லப்பட்டனர். அனி ஃப்ராங்க் யூத இனத்தை சேர்ந்தவள்.
     1923 ஆம் ஆண்டில் ஃப்ராங்க்பர்ட்டில் பிறந்தவர் அனி ஃப்ராங்க். அவரது பெற்றோர்கள் 1933 இல் ஆம்ஸ்டர்டாம் வந்தார்கள். 1941 காலகட்டத்தில் ஹிட்லரின் ஆட்கள் யூதர்களை துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.
அந்த காலகட்டத்தில் அனி ஃப்ராங்கும் இன்னும் சிலரும், ஓட்டோ ஃபிராங்க் என்பரவது வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். இவரது வீட்டில் ஒரு புத்தக அலமாரி இருந்தது. அதன் பின் ஒரு ரகசிய அறை இருந்தது. அனி ஃப்ராங்க்கும் மற்றவர்களும் அந்த சிறிய அறையில் தான் தங்கி இருந்தார்கள். அனி ஃப்ராங்க் தான் ரசித்தது, பார்ததது, தன்னை பாதிக்க வைத்தது, பார்த்து கொதித்தது போன்ற பல சம்பவங்களை மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ள படியே எழுதி வந்தார். 1942 ஆம் வருடம் ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் எழுத ஆரம்பித்தார். 1944 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வரை எழுதி இருக்கிறார். இந்த நாட்குறிப்பு ஹிட்லரின் காலக்கட்டத்தில் நடந்த கொடுமைகளையும் சித்தரிக்கிறது.
     இந்த நாட்குறிப்பு உலகின் பல மொழிகளில் பிரசுரமாகி இருக்கிறது. தான் எழுதிய நாட்குறிப்பு புத்தகத்தை தனது நெருங்கிய நண்பனாகக் கருதினாள். அனி ஃப்ராங்க் தங்கியிருந்த இடம் தற்போது ஒரு அருங்காட்சியகமாக 1960 முதல் திகழ்ந்து வருகிறது. அங்கே அவர் கைப்பட எழுதிய அவரது நாட்குறிப்பு புத்தகமும் காணப்படுகிறது.
     பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்ற இந்த நாட்குறிப்பை, மரண பயத்துடன் எழுத தொடங்கும் போது அவருக்கு வயது 13 தான்.
     போர் வகை இலக்கியத்தில் உன்னதப் படைப்பான இந்நூல் 1947 இல் ஆங்கிலத்தில் “தி டயரி ஆப் தி யங் கேல்” என்னும் பெயரில் வெளிவந்தது.

                                     (படித்ததில் பிடித்தது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக