ஞாயிறு, 6 மார்ச், 2016

படிக்காவிட்டால் நீ ஒரு பொம்மை தான்!

 Image result for பொம்மை
  
·       படிக்காதவன் ஒரு பயனும் தராத உப்பு நிலத்திற்கு சமம். அவனது உடலழகு மண் பொம்மைக்கு சமமானது.
·         படித்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தால், இன் இவரை என்று காண்போமோ? என்று வருந்தும் விதத்தில் பிரிவர். இதுவே படித்தவர்களின் குணமாகும்.
·         பணக்காரனின் முன், ஏழை பணிந்து நடப்பது போல, ஆசிரியரிடம் மாணவன் பணிவுடன் பாடம் கற்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இழிவாக வாழ நேரிடும்.
·         தோண்டும் அளவிற்கு ஏற்ப கிணற்றில் தண்ணீர் சுரக்கும். அது போல , மனிதன் எந்த அளவுக்கு படிக்கிறானோ, அந்த அளவுக்கு அறிவாளியாக திகழ்வான்.
·         படித்தவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகி விடும். எந்த ஊரும் சொந்த ஊராக மாறும். இப்படியிருக்க, மனிதர்கள் உயிர் பிரியும் வரை படிக்காமல் இருப்பது ஏனோ தெரியவில்லை.
·         மனிதன் மகிழ்ச்சியாக வாழ உதவும் படிப்பு, உலகிலுள்ள மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ துணை பரிவதால், படித்தவர்கள் கல்வியை பெரிதும் விரும்புவர்.
·         தம்மை விட தன் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவது, அந்த குழந்தையின் பெற்றொருக்கு மட்டுமில்லாமல் உலகத்திற்கே நன்மை தருவதாக அமையும்.
·         தன் மகனை சான்றோர் என பலரும் புகழக் கேட்டால், அவனை பெற்ற பொழுதைவிட தாய் பெரிதும் மகிழ்வாள்.


1 கருத்து: