செவ்வாய், 8 மார்ச், 2016

வாய்ப்புக்களை உருவாக்குவோம் சாதனை படைப்போம்

விண்வெளியில் கால் பதித்த கல்பனா சாவ்லாவோ;
தன் முதுகில் குழந்தையை சுமந்து; கையில்
வாளை ஏந்தி போர் புரிந்த ஜான்சி ராணியோ;
பாரதத்தின் முதல் பெண் மருத்துவரான
     முத்துலட்சுமி ரட்டியோ;
பாரதத்தின் முதல் பெண் நீதிபதியான
     பத்மினி ஜேசுதுரையோ;
பாரதத்தின் முதல் பெண் காவல் துறை அதிகாரியான
     கிரண் பேடியோ;
வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை!
தன் இலட்சியத்தின் வழி வாய்ப்புக்களை
உருவாக்கிக் கொண்டதால் தான் சாதனை
என்னும் சிகரத்தை எட்டிப்பிடித்தார்கள் ஆனால்
நாம் மட்டும் ஏன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்?
இந்த மகளிர் தினத்தில் இருந்தாவது வாய்ப்புக்காக
காத்திருக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கி

சாதனை படைக்க முயற்சிப்போம்!

1 கருத்து: