புதன், 9 மார்ச், 2016

டெனிசன்

                                             விக்டோரியக் கவிஞர்:டெனிசன்(19ஆம் நூற்றாண்டு)

ஆல்ஃப்ரெட் லார்ட்டு டெனிசன் ஒரு வணிக வியாபரியின் மகன். வெர்ஸ்வெர்த்தின் இறப்புக்கு பின் இவர்``அவைப் புலவர்’’ஆனார்.அவர் காலத்தில் மிகச் சிறந்த ஒரு கவிஞராய் இவர் திகழ்ந்தார்.இவர் வெஸ்ட் ``மினிஸ்டர் அபே’’என்ற இடத்தில் புதைக்கப்பட்டார்.
டெனிசனின் கவி நடை:
                   டெனிசன் வார்த்தைகளுக்கும்,பழம்பெறும் விரிவாக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.அவரது படைப்புகளில் பற்றாக்குறை என்றால் அவரது சுயமாக ஆற்றலை வெளிப்படுத்தியிருக்க மாட்டார்.
அவரது திறமையையும்,கலை வெளிப்பான்மையும் யாராலும் மறுக்க முடியாது.அவர் எழுதுவதற்கு முன் தனது மனதில் அந்த காட்சியை பதிவு செய்து,தனக்குள் அதனை ரசித்த பின்னர் அவர் எழுதுவதில்,மிகச்சரியான வடிவத்தை காணலாம்.
நடையில் பூரணத்துவம்,மொழியைக் கையாலும் விதம்,பலதரப்பட்ட இசை கலந்த கவிச்சொற்கள் இவை அனைத்தும் குறிப்பிடத்தக்கன.
புதுமை,புனையம்,தரம் இதனையொட்டியே இவரது கவிதைகள் அமைந்திருக்கும்.ஆங்கில மக்களின் நாட்டுப்புற மற்றும் அமைதியான வாழ்க்கையே இவர் கருத்தாக கொண்டு எழுதுவார்.
டெனிசனின் புகழ்பெற்ற நாடகங்கள்:
வரலாற்று நாடகம்:
                 குயின் மேரி,ஹாரோல்ட்டு மற்றும் பெக்கேட்.
டெனிசனின் புகழ்பெற்ற சில கவிதைகள்:
                 இவரது அண்ணனும் இவரும் சேர்ந்து``போயம்ஸ் பை தி டு பிரதர்ஸ்’’, சான்சிலர் விருது பெற்ற``டிம்படூ’’,தி லொட்டஸ் ஈட்டர்ஸ்,``இன் மெமொரியம்’’என்ற இவரது படைப்பில் காலமான இவரது நண்பரான ஆர்த்தூர் ஹென்றி ஹாம்லன்கு பாடியிருப்பார்.மேலும் இவரது`
`மாவ்ட் அன்ட் அதர் போயம்ஸ்’’,`
`இடிலஸ் ஆஃப் தி கிங்’’,
``இனொக் ஆர்டின்’’

என்ற இவரது புகழ்பெற்ற படைப்பு பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக