புதன், 3 பிப்ரவரி, 2016

தன் வாயால் கெடுதல்



                
பழமொழி

                         முன்றுறையரையனார்

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைகள்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் – நல்லாய்!

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலுந்தன் வாயால் கெடும்.


நுணலும் தன் வாயால் கெடும் என்பது பழமொழி. நுணல் – தவளை.
மண்ணுக்குள் முழுகி ஒளிந்து கொள்ளும் தவளை தன் குரலைக் காட்டிக் கத்தி பாம்பிடம் அகப்படும். அதுபோல, பொல்லாங்கான பேச்சுக்களைப் பேசிவிட்டு மறைந்து திரியும் பேதையும், தன்னுடைய சொல்லினாலேயே துயரினுள் அகப்படுவான். அவனுடைய உண்மையான தன்மையைப் பிறர் அறிந்து, அவனை வெறுப்பார்கள்.  

2 கருத்துகள்: