திங்கள், 18 ஜனவரி, 2016

சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு;



இந்தியப் பொருளாதாரம் மற்றும்  உங்கள் குறிக்கோள்;

முன்னுரை;


         அன்புடையீருக்கு வணக்கம்.(18.01.2016)  இன்று எங்கள் கல்லூரியில் வணிகவியல் துறையை சேர்ந்த மாணவிகளுக்கு கோயம்புத்தூர் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து  N.SENTHIL KUMAR  உதவிப் பேராசிரியர்  (வணிகவியல் துறை)  அவர்கள் சிறப்பு சொற்பொழி ஆற்றினார்.இந்தியப் பொருளாதாரம் மற்றும் உங்கள் குறிக்கோள் குறித்து  பேசினார்.

இந்தியப் பொருளாதாரம் ;

         இந்தியப் பொருளாதாரம் எதனால் பின்தங்கியுள்ளது.அதிலிருந்து வெளியேற மாணவிகளாகிய இளைய தலைமுறையின் முயற்சி மற்றும் தனி நபர் வருமானம் உயர்வு மற்றும்  இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாகவும் இறக்குமதி குறைவாக இருப்பதும்  மேலும்  சிலவற்றை பகிர்ந்தார்.கல்வி முறையை மாற்றியமைப்பதும்  அதாவது இன்றை கல்வி பழமையானது எனவே  மாணவர்கள் அதை மட்டுமே படித்துப் பட்டம் பெறுகின்றன.தனது பாடப் புத்தகத்தை தாண்டி நிறைய விவஷசங்களை கற்க வேண்டும் என்றும் .உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதை அருமையாக எடுத்துரைத்தார்.


குறிக்கோள்;

          பழிப்பேச்சு  பேசும் உதடுகறள் பேசிக்கொண்டு தான் இருக்கும்.நமது  கடமையை முழு முயற்சியுடன்  செய்து  முடிக்க வேண்டும் என்று அற்புதமாக கூறினார்.மேலும்  ஒரு  தகவலை பரிமாற்றம் செய்வது  பேச்சு மூலமாக இல்லாமல் எப்படி செய்து முடிப்பது என்பதையும் ஒரு வேளையை எப்படி உள்வாங்கி மற்றும்  விருப்பத்தோடு செய்வது பற்றியும் விளக்கினார்.நாம் இது வரை ஒருவர் கட்டாயமாக ஒரு குறிகோள் இருந்தால் தான் அதை அடைய முடியும் என்று கேட்டு இருப்போம் ஆனால் இன்று இந்த வகுப்பு மூலம் 4 குறிக்கோள் இருந்தார் கட்டாயம் ஏதோ ஒன்றை அடைய முடியும் என்றும் இதனால் இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்று கூறினார்.

விளையாட்டு மூலம் வகுப்பு;

         எங்கள் மாணவுகளுக்கு இதனை விளையாட்டு மூலம் அவர்களை ஈடுப்படுத்தி அருமையாக புரிய வைத்தார்.





முடிவுரை;

         இன்றை சூழலில் மாணவர்களால் இயன்றால் மட்டும் தான் இந்தியாவை மாற்ற இயலும் என்ற வகையில் அமைந்தது.மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மையே.எண்ணங்களை உயர்வாக வையுங்கள் அது மலையை விட உயர்வாக இருந்தாலும் தவறில்லை.தோல்விகளை கண்டு மனம் தளராமல் அந்த தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.ஏனென்றால் தோல்வுகளே வெற்றிக்கு ஏணிப் படி.முதலில்  நாம்  நம்முடைய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் அதாவது  சுயமரியாதை.நாம் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்பதை விட  சாதித்தோம் நாட்டுக்கு  உண்மையான குடிமகனாய் இருந்தோம் என்பதே சிறப்பு.இந்த  வகுப்பு முழுமையாக பயனாக அமைந்தது.எங்கள்  கல்லூரி முதல்வர்  கார்த்திகேயன் ஐயா,துறைத் தலைவர் வே.ராதிகா அம்மா மற்றும் வகுப்பு பொறுப்பாளர்  செல்வி அம்மா அனைவருக்கும் நன்றிகள் பல.இந்த வகுப்பை ஏற்படுத்திக் கொடுத்தற்கு..  


2 கருத்துகள்: